×

கோஷ்டி மோதல் 15 பேர் மீது வழக்கு

தேவதானப்பட்டி, டிச. 27:  தேவதானப்பட்டி அருகே, இருதரப்பு மோதலில் 2 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக 15 பேர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். தேவதானப்பட்டி அருகே உள்ள ஜெயமங்கலம் காந்திநகர் காலனியை சேர்ந்த 18 வயது பெண் தேனி தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலையில் கல்லூரிக்கு சென்ற இவர், மாலையில் வீடு திரும்பவில்லை. இது குறித்து ஜெயமங்கலம் போலீசில் மாணவியின் தாயார் புகார் அளித்தார்.

இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த இளைஞருடன், மாணவி காதல் திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. இதனால், ஆத்திரமடைந்த பெண்ணின் வீட்டாருக்கும், இளைஞரின் உறவினர்களுக்கும் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் மாணவியின் தாயார் உள்பட 2 பேருக்கு காயம் ஏற்பட்டது. இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இது குறித்து இருதரப்பினர் அளித்த புகார்களின்பேரில் இருதரப்பிலும் 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Koshdi ,
× RELATED கோஷ்டி மோதலால் கோட்டை விட்ட கெலாட்